முதல் காதல்
அவள்
சிரிக்கும் கண்களில்
சிக்கிய மீனாய் மனசு
காதணிகள்
குழந்தையாய்
இடுப்பசைக்க
சிறகடிக்கும் பேச்சு
மல்லி வாசத்தை
முந்தி வந்து
அவள் வருகையை
சொல்லிப் போகும்
சிகைக்காய் மணம்
வீசும் தென்றலில்
மெல்ல என் முகம்
தொடும் அவள்
துப்பட்டா நுனி
கடற்கரை மணலில்
கை கோர்த்து நடக்கையில்
கால் கொலுசு போட்ட
பிண்ணனி இசை...
காத்திருக்கும் வேளை
மனசோ
மது குடித்த
மதம் பிடித்த ஆனை
இப்படி
சிறிதும் அசையாமல்
நங்கூர நினைவுகள்...
உலகிலேயே முடியாதது
முதல் காதலை மறக்க
முயலுவது தான் போலும்
ஆமாங்க
என
மனைவியும் சொல்ல
அன்றே
மறந்தது என்
முதல் காதல்...
தேடுகிறேன் தேடுகிறேன்
தேடுகிறேன் தேடுகிறேன்
காணவில்லை...
சொந்த பந்தங்கள்
நண்பர்கள்
அனைவருக்கும்
தனித்தனி அறைகள்...
தேடுகிறேன் தேடுகிறேன்
காணவில்லை...
சொகுசாக சிலர்
சோகத்தில் சிலர்
சமாளித்து பலர்..
இருக்கும் அறையின்
நிறை குறை
ஒப்பீடு செய்து...
எதிரில் பட்ட என்னிடம்
அள்ளி வீசினார்கள்
குற்றக் கணைகளை..
தெரிந்தும் பதில் சொல்லாமல்
தொடர்ந்தது என் தேடுதல்
காரணம்
அறைகள் ஒதுக்கியது
நானல்ல..
சாவிகளின் தேர்வு
அவர்களே..
இன்னும் ஏராளமாய்
சொகுசான அறைகள்
திறக்காமலேயே....
கடைசிவரை
மனசின்
எந்த அறையிலும்
காணவில்லை...
நான்
வழிப்பறி கொள்ளை
கோடிக் கணக்கான
குதிரைகள்
வரிசை கட்டி
நிற்காமல்
நடக்க...
முதுகில்
இரண்டு மூட்டைகள்...
ஒன்று தங்கம்
இன்னொன்று தகரம்
புரிந்து கொண்டேன்
அபகரித்தால்
இரண்டுமே
சுமைகள் தான்
இனியும்
எடுக்கப் போவதில்லை
எதையும்...
வழிப்பறி கொள்ளையை
நிறுத்தி விட்டேன்
நேற்றோடு...
குதிரைகளின்
குளம்பொலி தாளத்தை
தூரமாய் நின்று
மனம் சலனமின்றி
இரசிக்க....
நிமிடக் குதிரைகள்
மூட்டைகள் குறையாமல்
என்னைக்
கடந்தது...
பங்காளிச் சண்டை
பங்காளிச் சண்டை
பற்றி எரிகிறது
ஊர் மட்டுமல்ல
பெற்ற என் வயிறும் தான்...
சமாதானம் செய்தே
சளைத்து விட்டேன்....
வாழ்நாள் பாதி
கழிந்ததது தான் மிச்சம்
சண்டை ஓய்ந்தபாடில்லை
தொடர்ந்து தொடுது உச்சம்....
ஊரே கூடி நின்னு
வேடிக்கை தான்
பார்க்குதே ஒழிய
ஒன்று கூடி
நெருங்கி வந்து
நீதி சொல்ல தயங்குது...
கதிரவன் நகரில்
அமைதி திரும்ப
ஆகுமாம் இன்னும்
ஆண்டுகள் சுமார்
நானூற்றி அய்ம்பது கோடி...
சோதிடர்கள் கணிப்பு.....
நான் யார் ....
ஆத்திகன் அல்ல...
கடவுளை வணங்கியதில்லை
நாத்திகன் அல்ல...
சங்கேத மொழியில்
சம்பாஷணை....
தீவிரவாதி அல்ல....
வெடிக்க காத்திருக்கும்
நான் மறைவாய் வைத்த
குண்டுகள்...
பயங்கரவாதி அல்ல...
நான் யார் ....
ஆழ்ந்த யோசனையில்
மெல்ல நுழைந்தது
சிறகு ஒன்று .....
கோபுரத்திலிருந்து
கூட்டமாய் புறாக்கள்
பட பட வென
இறக்கை உதறி பறந்த போது .....தளரவில்லை தணிகாசலம்
எத்தனை முறை
வெட்டினாலும்
வேரோடு
பொசுக்கினாலும்
காடாய் வளருதே
கர்வம்....
என்ன சாமி செய்ய ...
படியேறி கேட்டேன்
பழனி மலை
முருகனிடம்....
பதில் இல்லை...
தந்தைக்கே உபதேசம்
செய்தவனே...
மௌனம் கலைவாய்
எப்படி சொல்வேனடா
இப்படி
உசுப்பேற்றி உசுப்பேற்றியே
ஒன்றானவனை
பல கோடி கூறாக்கினாய்...
மயக்கத்தில்
பதிலை மட்டுமல்ல - இப்ப
கேள்வியையே
தொலைத்து விட்டு
கேட்பாரற்று
நிற்கிறேன்
தனிமையில் நான்...
தளரவில்லை
தணிகாசலம்
விடை காண விரைந்தார்
திருப்பதி நோக்கி.....
அப்பாவின் உயிரே நான் தான்
அப்பாவின்
உயிரே நான் தான்...
முதல் நாள் பள்ளி
சேர்க்கையின் போதும்
முகூர்தத்தின் போதும்
அவர் உடலின் நடுக்கம்
உணர்ந்தேன்
ஆண்டுகள் உருண்டது..
கணவனே என் உலகம்
அவன் உலகத்திலோ...
நெரிசலில் நான்.
ஆண்டுகள் உருண்டது..
உறங்கும் வேளை
உதட்டை சுழித்து
சிரிக்கும் பிள்ளையின்
கனவில் நானே என்று
கனவில் மிதக்கும் நான்...
பிள்ளைக்காகவே
நான்...
ஆண்டுகள் உருண்டது..
அம்மா பாவம்ப்பா
அன்பா சொல்லுங்க
திட்டாதீங்க...
அப்பாவிடம்
விண்ணப்பம்....
ஆண்டுகள் உருண்டது....
மருமகளும், நானும்
ஒரே வீட்டில்...
எங்கள் மனசோ
முள்ளின் பார்வை வேண்டி
தராசின்
எதிரெதிர் தட்டில்....
ஆண்டுகள் உருண்டது..
அப்பாவின் செல்லமாமே நீ
அவளை பிடித்து
அரவணைத்துக் கொஞ்ச
போங்க பாட்டி
பெருமையுடன்
பிடி விலக்கி...
பழைய சக்கரம் ஒன்றை
ஓட்டிச் சென்றாள் பேத்தி....
சிரித்துக் கொண்டேன்
சக்கரம்
உருள்வதைப் பார்த்து....
வானின் பின்பக்கம்
வானின் பின்பக்க
வண்ணம்
வெள்ளை தான் அப்பா
ஆச்சரியமாய்...
எப்படி கண்டு பிடித்தாய்
அதோ அந்த
ஓட்டை
வழியாகத் தான் என்று
நிலவைக் காட்டினாள்
பெருமிதத்துடன் ...
புதரில் புலிகள்...
அடர்ந்த காடு
மரங்களில் மந்திகள்....
மேயும் மான்கள்...
வியுகம் வகுத்து
புதரில் புலிகள்...
தாவும் முயல்கள்....
தந்திரத்தோடு நரிகள்...
தாகத்துடன் யானைகள்...
தயாராய் முதலைகள்...
அதிசயம்
தாக்குதல்கள்
அறவே இல்லை....
வெளியே வந்தேன்
வீதியில் நடந்தேன்....
எதிரில்
காடு
மிருகக்காட்சி சாலை
சர்க்கஸ்
மறைத்து நடந்த படி
மனிதர்கள்..
தனிமையே பரிசு
வாழ வந்தோம்
வாழ வைத்தோம்
கடைசியில்
தனிமையே பரிசு
மௌனமாய் நான்
மனித குலம் முன்
நான் சிறிசு ....
நீயோ அக்குலத்தின் வித்து
எழுந்து நில்
எதிர்த்து நில்
மனம் திறந்தது மரம்
மங்கையிடம் ....
காதலுடன் பார்த்து
இலுப்பிக் கொள்ளாமல்
பூசிக் கொண்ட
இதழ்களின் வண்ணத்தில்
இதயம் வழுக்க...
வெட்கம் விட்டு
சுற்றம் மறந்து
கிட்டே செல்ல...
முழு உடல் சிலிர்க்க
முகத்தில் சிறு உரசல்
முற்றிலும் ஆனது ஈரம்...
முந்திக் கொண்டு தந்த
முத்தமோ
வெட்கத்தில் அவள்
சற்று
விலகிச் செல்லும் போது
வீசி எறிந்த பனித்துளிகளோ....
குழப்பமாய் நிற்க
தலைத் துவட்டி
வாரி அணைத்து
என்னை
தூக்கி நடந்த போது
அவனுக்குத் தெரியாது
பூங்காவிலிருக்கும்
பூக்களை
காதலுடன் பார்த்து
கை அசைக்குது மனசு என்று ...
யார் வீட்டுப் பெண்ணோ அல்ல..
கன்னி வெடிகள்
புதைத்து
மிதி படுமோ
ஆவலில்
வீட்டில் சில
மெட்டிகளும், மீசைகளும்
வெட்டியாய் காத்திருக்க
இவர்களிடம் யார் சொல்வது
வருவது
யார் வீட்டுப் பெண்ணோ அல்ல..
நிறை குறை பாராமல்
நெஞ்சார வாழ்த்துங்கள்...
நம் பிள்ளையோடு வரும்
மதிப் பெண்ணை....
(இன்று +2 முடிவுகள் ----- 07-05-2015)
கொலுசு
விரைவில்
புதிய கவிதைகள்
கொலுசு ஓசையில்
மனச வருட போவுது ...
எல்லோரும் அதில்
மணி கட்டலாம்
கூட்டணியாக ....
===================
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி
kolusu.in@gmail.com
மு. அறவொளி
9486105615
மரத்தின் வலிகள்
ஆணியடித்து
மாட்டினார்கள்....
விடுமுறைக் கால
சிறப்பு பயிற்சி
விளம்பரங்கள்...
வலித்தது
ஆணி இறங்கிய போதும்
விடுமுறை, உறவுமுறை
இழந்த குழந்தைகள்
என்னைக் கடந்த போதும்
மாட்டினார்கள்....
விடுமுறைக் கால
சிறப்பு பயிற்சி
விளம்பரங்கள்...
வலித்தது
ஆணி இறங்கிய போதும்
விடுமுறை, உறவுமுறை
இழந்த குழந்தைகள்
என்னைக் கடந்த போதும்
குடுமிப் பிடி சண்டை
தினம் தினம்
வீட்டில்
குடுமிப் பிடி சண்டை
இன்றும்
அவளுக்கே
வெற்றி
தேங்காய்
சரி பாதியாய்
உடைய.....
வீட்டில்
குடுமிப் பிடி சண்டை
இன்றும்
அவளுக்கே
வெற்றி
தேங்காய்
சரி பாதியாய்
உடைய.....
வீதியில் சாமி உலா
ஏழெட்டு விண்ணப்பங்களும்
பதிலுக்கு
பூ முடி, தீ மிதி
அங்க பிரதட்சனை
பட்டியலோடு
பக்தியுடன் வாசலில்
சிவகாமி...
வீதியில் சாமி உலா
அதிர் வேட்டுக்கள் அதிர
பூசையறையில்
ஊது பத்தியின்
ஒரு சாம்பல் துகளில்
உறங்கிக் கொண்டிருந்த
இறைவன்
என்னடா சத்தம் என்று
புலம்பி விட்டு
புரண்டு படுத்தார்....
பதிலுக்கு
பூ முடி, தீ மிதி
அங்க பிரதட்சனை
பட்டியலோடு
பக்தியுடன் வாசலில்
சிவகாமி...
வீதியில் சாமி உலா
அதிர் வேட்டுக்கள் அதிர
பூசையறையில்
ஊது பத்தியின்
ஒரு சாம்பல் துகளில்
உறங்கிக் கொண்டிருந்த
இறைவன்
என்னடா சத்தம் என்று
புலம்பி விட்டு
புரண்டு படுத்தார்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)