பங்காளிச் சண்டை



பங்காளிச் சண்டை
பற்றி எரிகிறது
ஊர் மட்டுமல்ல
பெற்ற என் வயிறும் தான்...

சமாதானம் செய்தே
சளைத்து விட்டேன்....
வாழ்நாள் பாதி
கழிந்ததது தான் மிச்சம்
சண்டை ஓய்ந்தபாடில்லை
தொடர்ந்து தொடுது உச்சம்....

ஊரே கூடி நின்னு
வேடிக்கை தான்
பார்க்குதே ஒழிய
ஒன்று கூடி
நெருங்கி வந்து
நீதி சொல்ல தயங்குது...

கதிரவன் நகரில்
அமைதி திரும்ப
ஆகுமாம் இன்னும்
ஆண்டுகள் சுமார்
நானூற்றி அய்ம்பது கோடி...


சோதிடர்கள்  கணிப்பு.....