அணில்


நேற்று பார்த்து வைத்திருந்த
ஒரு பெரிய கொய்யாவை
காணோமுங்க
இரண்டை பாதி கடிச்சி வச்சிருக்கு
இந்த அணில் தொல்லை தாங்கலை  என
முன்னெச்சரிக்கையாக
பழுக்குமுன்னே பறிக்கப்பட்ட
மூன்று    கொய்யாக்களோடு
அலறிக் கொண்டே வந்தளை நோக்கி
இந்த மூன்றைக் காணோமென நாளை
அணில்களும் பேசிக் கொள்ளும்
இனியாவது  கொய்யா மரமருகில் போகாதே
பதட்டத்தோடு பாதி கொரிக்காமல்
அவை முழுதும் தின்னட்டுமே என்றேன்.