நான் யார் ....





கோவிலுக்கு தினம் போவேன்
ஆத்திகன் அல்ல...

கடவுளை வணங்கியதில்லை
நாத்திகன் அல்ல...

சங்கேத மொழியில்
சம்பாஷணை....
தீவிரவாதி அல்ல....

வெடிக்க காத்திருக்கும்
நான் மறைவாய் வைத்த
குண்டுகள்...
பயங்கரவாதி அல்ல...

நான் யார் ....

ஆழ்ந்த யோசனையில்
மெல்ல நுழைந்தது
சிறகு ஒன்று .....

கோபுரத்திலிருந்து
கூட்டமாய் புறாக்கள்
பட பட வென
இறக்கை உதறி பறந்த போது .....