போரைத் தொடர  சுகமே..


உன்னை வென்று மீள
கையில் எடுத்த
ஆயுதம் தான்
கவிதை....

வென்று வா வென
வாழ்த்துவது மட்டுமல்ல
களத்தில் ஆயுதம்
கை நழுவும் போதெல்லாம்
கனிவுடன் தீண்டி
கையில் எடுத்து
கொடுப்பதும் நீயானால்

ஒன்று மட்டும் நிச்சயம்
வெற்றி எனக்கில்லை
எனினும்

போரைத் தொடர  சுகமே..