இலுப்பிக் கொள்ளாமல்
பூசிக் கொண்ட
இதழ்களின் வண்ணத்தில்
இதயம் வழுக்க...
வெட்கம் விட்டு
சுற்றம் மறந்து
கிட்டே செல்ல...
முழு உடல் சிலிர்க்க
முகத்தில் சிறு உரசல்
முற்றிலும் ஆனது ஈரம்...
முந்திக் கொண்டு தந்த
முத்தமோ
வெட்கத்தில் அவள்
சற்று
விலகிச் செல்லும் போது
வீசி எறிந்த பனித்துளிகளோ....
குழப்பமாய் நிற்க
தலைத் துவட்டி
வாரி அணைத்து
என்னை
தூக்கி நடந்த போது
அவனுக்குத் தெரியாது
பூங்காவிலிருக்கும்
பூக்களை
காதலுடன் பார்த்து
கை அசைக்குது மனசு என்று ...