எத்தனை முறை
வெட்டினாலும்
வேரோடு
பொசுக்கினாலும்
காடாய் வளருதே
கர்வம்....
என்ன சாமி செய்ய ...
படியேறி கேட்டேன்
பழனி மலை
முருகனிடம்....
பதில் இல்லை...
தந்தைக்கே உபதேசம்
செய்தவனே...
மௌனம் கலைவாய்
எப்படி சொல்வேனடா
இப்படி
உசுப்பேற்றி உசுப்பேற்றியே
ஒன்றானவனை
பல கோடி கூறாக்கினாய்...
மயக்கத்தில்
பதிலை மட்டுமல்ல - இப்ப
கேள்வியையே
தொலைத்து விட்டு
கேட்பாரற்று
நிற்கிறேன்
தனிமையில் நான்...
தளரவில்லை
தணிகாசலம்
விடை காண விரைந்தார்
திருப்பதி நோக்கி.....