வீதியில் சாமி உலா

வீதியில் சாமி உலா
ஏழெட்டு விண்ணப்பங்களும்
பதிலுக்கு
பூ முடி, தீ மிதி
அங்க பிரதட்சனை
பட்டியலோடு
பக்தியுடன் வாசலில்
சிவகாமி...

வீதியில் சாமி உலா
அதிர் வேட்டுக்கள் அதிர

பூசையறையில்
ஊது பத்தியின்
ஒரு சாம்பல் துகளில்
உறங்கிக் கொண்டிருந்த
இறைவன்
என்னடா சத்தம் என்று
புலம்பி விட்டு
புரண்டு படுத்தார்....