உன்னிடம்
நெறைய நெறைய பேசணும்
என் சன்னல் வழியாய்
நீ அனுப்பி வைத்த
பட்டாம் பூச்சிகளைப் பற்றி
உன் பெயர் சொல்லும்
போதெல்லாம் அவை
தூவும் பல வண்ணங்கள் பற்றி
அவை அமரும் இடமெல்லாம்
வித விதமாய் பூக்கள் பூக்கும்
வினோதம் பற்றி
நேற்றைய மாலைப் பொழுதில்
அவை என்னை பெரிய
பட்டாம்பூச்சியாக்கியது பற்றி
சரி, இந்தக் கவிதையை நீ
படித்தது போதும்
எழுந்து வந்து ஏறிக் கொள்
உன் தோட்டத்தில் தான்
காத்திருக்கிறேன்
நிலவுக்கு பின்புறம் போய்
நிம்மதியாய் உட்கார்ந்து
இன்னும் நெறைய நெறைய பேசுவோம்
நிலவுக்குள் எப்படி நிலவென
கவிஞர்கள் கீழிருந்து
விடிய விடிய கவிதை எழுதி
காகிதங்களெல்லாம் தீர்ப்பதற்குள்