மரம்

நல்ல காற்று நேரடி மழை
மேலோகத்தில் கிடைக்குமென
வெக்கை புழுக்கம் தாளாமல்
வெளியே வர விசும்பும்
வேர்களையும்

மாசு படா காற்றும்
தூசு கலக்கா நீரும்
கீழே கிடைக்குமென ஏங்கும்
கிளைகளையும்

மௌனமாய் அரவணைத்துக்
கொள்கிறது
மரம்