பார்த்துக் கொண்டிருந்தார்கள்


உண்டியல் வைத்து
உள்ளே பசியறியாதவன்
ஒருவனும்

உடைந்த பாத்திரத்தோடு
வயிறு காலியாய்
வாசலில் பலரும்

பாவம் செய்தவர்களின்
வருகையை ஆவலுடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்