மலையின் மௌனம்


முழு நிலவைப்
பார்க்கும் போதோ...
கடல் அலையில் கால்
நனைக்கும் போதோ
மழையின் சாரல் கன்னம்
தொடும் போதோ
மலையின் மௌனம்
கேட்கும் போதோ
கண்கள் காதல் கவிதை
மேயும் போதோ
உன்னுள்ளே நான்
வருகிறேனோ இல்லையோ
இவை எதுவும் இன்றியே
என்னுள்ளே எப்போதும்  நீ...