யாரோ ஒருவனின்




யாரோ ஒருவனின்
பக்தியை நிருபிக்க

யாரோ ஒருவன்
கருணை பெற்றிட

யாரோ ஒருவன்
காசு பார்த்திட

அதிகாலையிலேயே
கருணையின்றி அறுக்கப்பட்ட
வாழைக் கன்றுகள்
சந்தைக்குப் போகுது
வழியெங்கும்
வெண் குருதி சிந்தியபடி