பாதை சரியில்லை


பாதை சரியில்லை
போய்த்தான் ஆக வேண்டும்
கோபத்தையும் எரிச்சல்களையும்
கூட வருவோரிடம் கூட
கொட்டிக் கொண்டே வருகிறேன்
அங்கே என் அப்பாவின்
காலடித் தடங்களைக்

காணும் வரை