கடைசியில் மீந்ததை


கடைசியில் மீந்ததை
தானே எடுத்துப் போட்டு
சாப்பிடும் நேரத்தில்
ஓட்டலில் வேலை பார்க்கும்
சிறுவன்  கணேசனும்
அம்மாவாகிப் போனான்.
தூரத்து குக்கிராமத்தில்
தூங்காமல் ஒரு தாய்

புரண்டு கொண்டிருந்தாள்