வாலும், வாயும் எட்டாத இடத்தில்

வாலும், வாயும்  எட்டாத இடத்தில்
வாலும், வாயும் எட்டாத இடத்தில்
உண்ணிகள் அமர்ந்து
உக்கிரமாய் உதிரம்
உறிஞ்சிக் குடிக்க
பாவம் என்ன செய்யும்
தொழுவத்து மாடு
பகுதி தோலை மட்டும்
உதறிட
கதறுது ஒட்டுண்ணிகள்
பூகம்பம் என்று....