ஏழாவது அறிவு மூலம்

ஏழாவது அறிவு மூலம்
என்னடா உனக்கு
புற்று நோயாமே...

பயப்படத் தேவையில்ல
ஆரம்ப கட்டம் தானாம்...
பாதிப்பும்
ஒரு செல் அளவே...

நீக்கிடலாம் அதை
பெரிய மருத்துவர்
சொன்ன போதும்
வேண்டாமென
மறுத்து விட்டேன்

அறுத்தெறிய
அனுமதியேன்
என்னுடல்
நானறிவேன்

நம்பிக்கையுண்டு
எந்த தீய
நுண்ணுயிரையும் - என்
ஏழாவது அறிவு மூலம்
நன்னுயிராக்குவேன்...

இரண்டு பிரபஞ்சங்களின்
உரையாடலை
உடனடியாய்
பூமியில் யாரும்
கேட்டிருக்க வாய்ப்பில்லை தானே ...