அவன் தனிமைப்
பூக்களெல்லாம்
தவற விட்டான் நீ
சற்று திரும்பிப் பார்க்கையில்
குலுக்கி
கொடுத்துப் போன
சிரிப்பொலி
குறையாத நெல்மணியாய்
அவன் குதிருக்குள்ளே...
வான் நிலா
கடல் காற்று
மலை அருவி என
காகிதங்களில் அவன்
கவிதைக்குஞ்சுகள்
பொரிக்குமுன் அவனிடம்
போய்ச் சேரடி....