கொஞ்சிக் கொஞ்சி


சிந்தாமல் என அப்பாவிடமும்
சீக்கிரமாய் என அம்மாவிடமும்
சுத்தமாய் என அண்ணாவிடமும்
அதிகாரமாய்ச் சொன்ன யாழினி

பொம்மையை மட்டும் மடியில் வைத்து
கொஞ்சிக் கொஞ்சி
கதைச் சொல்லி ஊட்டினாள் தன்
கனவு சமையலறையிலிருந்து...