பேரம் படிந்ததாய்



பிரார்த்தனைகளும்
பிரதிபலனாய்
தலை முடியும் கொஞ்சம்
வெண் பொங்கலும்
தருவதாய்ச் சொல்ல
கடவுள் அன்றும்
பேச்சற்று  நிற்க
பேரம் படிந்ததாய்
பேச்சிமுத்து மகிழ்ந்தார்