கழிவு நீராய் வீதியில்


அழுதும் சிரித்தும்
ஆடியும் பாடியும்
அரைகுறை ஆடையுடன்
கழிவு நீராய் வீதியில்
கடப்பவளுக்கு
காண்பவர்களின் இரக்கம்
ஆடையானது