புத்தகத்தில்
வைத்த மயில் இறகு
குட்டி போடுமா
முட்டலை
இங்கி பிங்கி பாங்கி
ஒற்றைப் படையில்
நிறுத்தி விட்டால்
கொம்பு முளைக்குமா
வெள்ளைப் பறவைகளைப்
பார்த்து வேகாய்
நகங்கள் உரசினால்
அதில் பூ பூக்குமா
எப்போதும் சரியான
முடிவு சொல்லுமா
சிறுமி யாழினியின்
கேள்விகளுக்கு
ஆம் என்று சொல்லி
சென்று திரும்பினாள்
சிறுமியாக அம்மாவும்