பாட்டன் முதல் இவன் வரை
பாட்டன்
முதல் இவன் வரை
கிட்டே
வந்து சொன்னாலும்
எதுவும் புரியவில்லை
இன்று
வரை...
புரிந்ததா
என அவனும்
புரியலை
என நானும்
கூறிக்
கொண்டதே இல்லை என
பொன்னுசாமியின்
கழுத்தில்
தொங்கிக்
கொண்டிருந்த
கணேசனிடம்
சுப்பிரமணி
சொல்லியதை
அர்ச்சகர்
கேட்டிருக்க
வாய்ப்பே
இல்லை...