சுமை தாங்கும் பிள்ளைகள்


ஒரு தாய்ப் பிள்ளைகள்
ஒருவர் தோள் மீது
ஒருவர் ஏறி அமர...
மனித மரம் வளர்ந்தது.

நகரந்து விடாதே என
எல்லோரும்
தன் கீழுள்ளோனை
எச்சரிக்க...

விளையாட்டை
இரசிக்கும்
அம்மாவுக்கோ
அச்சம் கலந்த கவலை....

சுமைகள் அத்தனையும்
ஊமையாய் ஏந்தி
கால்கள் தள்ளாட
கடைசியில்  நிற்கும்
மகன் மீதல்ல...

சுமைகள் ஏதுமின்றி
சுகமாய்
உச்சியில் உள்ள மகன்
எங்கே
விழுந்திடுவானோ என
அச்சப்பட....

இப்படிப்பட்ட
அம்மாக்காள் தேவையா

சுமை தாங்கும் பிள்ளைகள்
முடிவு செய்க
மதம் சாதிய உறவுகள்

மண்ணோடு போக...